Tuesday 3 April 2018

Original Tamil Status in Tamil Language - Tamil Status


1. நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ
அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- சுவாமி விவேகானந்தர்.

2. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
- சுவாமி விவேகானந்தர்

3. பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்.
- தேசிக விநாயகம் பிள்ளை.

4. ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.
- விக்டர் ஹியூகோ.

5. வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை -- இம்மூன்றும் இருந்தால் போதும்
-- தாமஸ் ஆல்வா எடிசன்


6. எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
- சுவாமி விவேகானந்தர்.

7. ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏன் என்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. எந்த ஒரு வேலை ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். -சுவாமி விவேகானந்தர்.

8. சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.

9. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

10. அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

0 comments: